THOUSANDS OF FREE BLOGGER TEMPLATES »

Sunday, January 28, 2007

ஈழம்

ஈழம் என்றாலே
கண்ணில் ஈரம்
சுரந்தது  அன்று...

ஈழம் என்றாலே
நெஞ்சில் வீரம்
பிறக்கிறது இன்று..

'தம்பியுடையான் படைக் கஞ்சான்'
நூற்றாண்டுகள் கடந்தும்
அர்த்தம் இழக்காத வாக்கியம்...

வீடும் வாழ்வும் இழந்து
நாடும் இல்லையென
துரத்தப்பட்டு
சொந்த மண்ணிலேயே
நாடோடியாய்
சிங்களக் கயவரால்
நிந்திக்கப்பட்ட
எங்கள் தமிழ்மக்கள்
எழுந்தனர் புலிகளாய்....

வீரத்திற்கு பெயர் போன
தமிழினப் புதல்வர்களின்
வாளுக்கு பதில் சொல்ல
வக்கற்ற சிங்களர்கள்
கூச்சலிட்டனர்,
தம் மண்ணில் பயங்கரவாதமாம்....

உரிமையைக் கேட்டு
உறுமி எழுந்தால்,
அடிமை நிலைப் போக்க
அதட்டி யெழுந்தால்
அதற்கு பெயர்
பயங்கரவாதமா ?

பன்னாட்டு ஏகாதிபத்திய
பார்ப்பனிய பனியா
ஊடகங்களுக்கு
இது தான் தீவிரவாதம்..

பன்னாட்டு நிறுவனங்களின்
பிச்சைக் காசின்
ருசியில் திளைக்கும்
மத்திய-மாநில அரசுகளுக்கு
அந்நாட்டு மக்கள்
பசியால் செத்து
பாடையில் போனாலும்
கவலை பிறக்காது...

லட்சியத்தை ஒருநாள்
நிச்சயம் அடைய
உண்மை நெறியுடன்
அன்பு வெறியுடன்
பேராடும் எம்படை
வெல்லும் ஒருநாள்..

அந்நாள்
உலகத் தமிழர்களின்
பொன்னாள்..

***********************************************
                தோழமையடன்
-----------------க.அருணபாரதி----------------
===www.arunabharathi.blogspot.com==
***********************************************