THOUSANDS OF FREE BLOGGER TEMPLATES »

Friday, October 3, 2008

நினைவோடு வாழ்கிறேன்...

நினைவோடு வாழ்கிறேன்...
க.அருணபாரதி


துணையற்ற
தூணாக
வாழ்வெங்கும்
வீழ்கிறேன்...

இரவெல்லாம்
கண்விழித்து
நினைவோடு
வாழ்கிறேன்...

மறைவான
இடம்அமர்ந்து
மனம்விட்டு
அழுகிறேன்..

கரைகின்ற
கண்ணீரில்
தினம்உன்னை
காண்கிறேன்..

எனைஎனக்கே
பிடிக்கவில்லை
என்றெண்ணி
நோகிறேன்..

உனைகாண
விழித்திறந்து
உயிரோடு
சாகிறேன்...

பிறைபோல
நினைவாலே
தினம்தினம்
தேய்கிறேன்...

மறந்திடுவேன்
என்றெண்ணி
மறைந்துபோன
பெண்ணே...

நினைவுகளை
மறத்தல்
மிகக்கடினம்
உணர்ந்துகொண்டேன்...

உணர்த்தியமைக்கு
நன்றி சொல்ல
உதடுகளிருந்தும்,
உணர்வுகளுக்கு
மதிப்பளித்து
மறந்தவனாய்
நடித்தேன்...