THOUSANDS OF FREE BLOGGER TEMPLATES »

Sunday, March 25, 2007

வான்படை வாளுருவியது...

வான்படை வாளுருவியது...
 
சிங்கள இராணுவம்
சித்தம் கலங்கிட
தமிழரின் வான்படை
கொடுத்த அடியில்
 
எங்கட மக்களை
ஏதிலி ஆக்கிய
சிங்கள படைகள்
விழந்தது காண்..
 
தேன்மொழித் தமிழின்
மானங்காத்த வீரர்கள்
வான்படை கொண்டு
வாளுருவியது காண்...
 
எட்டி உதைத்து
இறுமாப்பு கொண்ட
சிங்கள வெறியரின்
சீற்றத்தை தாங்கி
 
உலக சமூகத்தின்
பார்வைக்கு ஏங்கி
எத்தனை வருடங்கள்
கைக்கட்டி நிற்க ?
 
சிங்களன் செய்தால்
உள்நாட்டு போராம்
சீற்றத்துடன் தமிழன்
செய்தால் தீவிரவாதமா ?
 
பாகிஸ்தான் தருகிறான்
அமெரிக்கா தருகிறான்
பார்க்காமல் விட்டால்
இந்தியனும் தருகிறான்..
 
தமிழர் படைகண்டு
தானாய் நடுங்கிஓடும்
சிங்களன் ஆயுதமே
போதுமடா தமிழர்க்கு...
 
லட்சிய போராளிக்கு
பொருட்டல்ல மரணம்..
ஈழம் வெல்லட்டும்
இதுதான் தருணம்...
 
-----------------------------------------------------------
"எங்கள் வாழ்வும் எங்கள் வளமும்
மங்காத தமிழென்று சங்கே முழங்கு"
-----------------------------------------------------------
தோழமையுடன்
       க.அருணபாரதி
   www.arunabharathi.blogspot.com
-----------------------------------------------------------

Thursday, March 15, 2007

சின்னஞ்சிறு புதுக்கவிதை...

எதிர்காலக் கனவுகள்
என்னவென்று அறியாமல்
புதிர்கேள்வி ஏதுமின்றி
பூக்களொடு உறங்குகிறாள்
என் தேவதை...

சிரித்தாலும் அழுதாலும்
சிறகடிக்க பறந்தாலும்
சித்திரமாய் தோன்றும்
சின்னஞ்சிறு புதுக்கவிதை...

-----------------------------------------------------------
"எங்கள் வாழ்வும் எங்கள் வளமும்
மங்காத தமிழென்று சங்கே முழங்கு"
-----------------------------------------------------------
தோழமையுடன்
க.அருணபாரதி
http://www.arunabharathi.blogspot.com/
-----------------------------------------------------------

Tuesday, March 13, 2007

பனித்துளிகள் வியக்கிறது...

இயற்கை அளித்த
கொடையான பனித்துளிகளை
கையில் ஏந்தி வியக்கும்
சின்னஞ்சிறு பெண்ணே...

பாசப் பிணைப்புடன்
உன் கைகளில் இருக்கும்
பனித்துளிகள் தான்
உன்னை எண்ணி வியக்கிறது...


"நாம் விழுந்தது கைகளிலா
அல்லது மலர் மெத்தையிலா என.."


-----------------------------------------------------------
"எங்கள் வாழ்வும் எங்கள் வளமும்
மங்காத தமிழென்று சங்கே முழங்கு"
-----------------------------------------------------------
தோழமையுடன்
க.அருணபாரதி
http://www.arunabharathi.blogspot.com/
-----------------------------------------------------------


Wednesday, March 7, 2007

மகளிர் தின வாழ்த்துக்கள்...

மகளிர் தின வாழ்த்துக்கள்...
எல்லோர் வீட்டிலும்
இறைவனின் பிரதிநிதியாய்
அன்னை..

எல்லோர் வாழ்விலும்
உள்ளன்பின் பிரதிநிதியாய்
தோழி..

எல்லோர் வீட்டிலும்
தனக்கே பிரதிநிதியாய்
மனைவி..

'எங்கெங்கு காணினும் சக்தியாடா'
பாடிய கவிஞனின் பாட்டின்
பிரதிநிதியாய்
வளர்ந்து வரும் 'பெண்ணியம்'...

வாழ்த்துவதோடு முடியாமல்
பெண்களை வாழவைப்பது பற்றி
சிந்திப்போம்..

பெண்களை போதையாய்
காட்டும் சினமா கயவர்களை
நிந்திப்போம்..

என் வாழ்வின் அனைத்து பக்கங்களிலும் விடாது
பற்றி கொண்டிருக்கும் அனைத்து மகளிருக்கும்
என் அன்பான மகளிர் தின வாழ்த்துக்கள்...

 
***********************************************
                தோழமையடன்
-----------------க.அருணபாரதி----------------
===www.arunabharathi.blogspot.com==
***********************************************

Tuesday, March 6, 2007

லட்சியம் வெல்லுமடா..

லட்சியம் வெல்லுமடா..
 
முற்றுப்புள்ளிகள் எல்லாம்
முடிவுரை அல்ல..
அடுத்த வாக்கியத்தின்
ஆரம்பமே...

'தோல்வி - சோர்வு '
இவையெல்லாம் உனை
பயங்கொள்ள வைக்கத் தான்
படைக்கப்பட்டன..

அரிசிமாவுக் கோலமிட்டு
எறும்புக்குகூட பசியாற்றிய
தமிழன் தான் இன்று
தன் மண்ணிலேயே அகதி...

கலங்காதே தமிழனே..
லட்சியம் வெல்லும்
நிச்சயம் ஒரு திகதி..

புல்கூட மிதி பட்டால்
எழுந்து தானாய் நிற்கும்..
புல் அல்லநீ  தமிழா
நீ புலிப்படையின் வர்க்கம்..

உணர்ந்து நீ எழுந்தால்
உலகம் உனது சொர்க்கம்..

மூவேந்தர்கள் வளர்த்த நம்
மூதாதையர் மொழியை
பாவேந்தர் சொற்படி
பாரெங்கும் பரப்புவோம்..

வா தமிழனே.. வென்று காட்டுவோம்...

***********************************************
                தோழமையடன்
-----------------க.அருணபாரதி----------------
===www.arunabharathi.blogspot.com==
***********************************************