THOUSANDS OF FREE BLOGGER TEMPLATES »

Monday, March 31, 2008

"இந்தியம்" எமக்கு வேண்டாம்...- க.அருணபாரதி

"இந்தியம்" எமக்கு வேண்டாம்...
க.அருணபாரதி
 
தமிழனை தினமும்
கொல்வதே வாழ்வென
சிங்களன் திரிவதை
'இனவெறி' என்கிறோம்...
 
தில்லியில் உள்ளவன்
சிங்களனுக்கு உதவி
திறைமறை காரியங்கள்
செய்வதை காண்கிறாம்..
 
முன்பு சொன்னது
இனவெறி என்போரே
பின்பு சொன்னதற்கு
பெயரென்ன சொல்வீரோ?
 
'தமிழனைக் கொல்ல
ஆயுதம் தராதே'
சொல்லி போராடும்
எங்களுக்கு பெயர்
எல்லாம் "தீவிரவாதி"....
 
கொன்று குவிக்கும்
சிங்களைக் கொஞ்சி
சீராட்டும் தில்லிதான்
தமிழரின் படுகொலைகளுக்கு 
திட்டமிட்ட "சூத்திரதாரி"...
 
கச்சத்தீவில் எங்கள்
உறவுகளை சுட்டுக்
கொன்றதிலே பங்குண்டு
என்பதால் தடுக்காத
தில்லி..
 
காவிரி, முல்லை,
பெரியாறு என்றெங்கள்
உரிமைகள் எவற்றுக்கும்
மகிழ்வுடன் நீயிட்ட
கொல்லி..
 
ஐயாயிரம் ஆண்டுமுன்பே
முப்பால் கொடுத்த
இனம் நாங்கள்
கொசுவை அடிக்க
தரவேண்டுமா சொல்லி?
 
எங்கள் சொந்தங்களை
கொல்வதில் மகிழச்சியா?
தில்லியே எம்மைஇனி
"இந்திய"த்தால் வாட்டாதே...
 
'இந்தி'யத் திமிரையும்
சூழ்ச்சியையும்
புரிந்து கொண்டோம்
இனியும் இம்மண்ணில்
"இந்தி"யத்தை நீட்டாதே...
 
-----------------------------------------------------------
தோழமையுடன்
       க.அருணபாரதி
   www.arunabharathi.blogspot.com
-----------------------------------------------------------