THOUSANDS OF FREE BLOGGER TEMPLATES »

Tuesday, June 12, 2007

என் வாழ்வில்..

என் வாழ்வில்..
 
கனவுக்கும் காற்றுக்கும்
கட்டுப்படாத என்மனம்
உணவாக உட்க்கொண்டது
உன் நினைவை
மட்டும் தான் பெண்ணே...
 
சினங் கொண்டு
சித்திரமாய் நீமுறைத்த
பார்வையிலும் கூட
அதை ரசித்து மனம்வெதும்பி
சிரித்தேனே பெண்ணே.......
 
தினமும் உன்னை
தித்திக்க நினைத்துவாழ்
உயிரினமாய் நான்,
எப்பொழுது மாறினேன்
தெரியவில்லை பெண்ணே....
 
எனக்காக என்வாழ்வில்
நீதந்த மாற்றங்கள்
உனக்காக என்வாழ்வை
தரநினைத்தால் ஏமாற்றங்கள்..
மனக்கணக்கு விதியை
யாரேனும் மாற்றுங்கள்....
 
மாற்றம் ஒன்றே
மாறாதது..
மார்க்ஸ் சொன்னது
பொருந்தாது...
 
தோழமையுடன்
க.அருணபாரதி