THOUSANDS OF FREE BLOGGER TEMPLATES »

Sunday, June 15, 2008

புரிந்தது புரியாமல் போனது

புரிந்தது புரியாமல் போனது
க.அருணபாரதி
 
தேர்வுக்காக படிக்க
விடுமுறை விட்டார்கள்
கல்லூரியில்...
 
வீட்டிற்கு செல்லாமல்
விடுதியிலேயே நீயிருந்ததால்
நானும் கல்லூரியிலேயே
தங்கினேன்
படிப்பதற்காக(?!)
 
மனதில் மட்டுமல்லாமல்
வெளியிலும்
மழைக்காலம் என்பதால்
பகலிலும் இருட்டாக
சுருங்கிக் கிடந்தது
வானம்
 
அந்த வானத்தின்
நிழற்குடையில்
தேர்வுக்கு படிக்க
வந்தாள்
என் தேவதை...
 
யாருமில்லா
வகுப்பறையில்
புத்தகப் பக்கங்களை விட
அவள் புன்னகை
பக்கங்கங்ளைத் தான்
அதிகம் படிக்கமுடிந்தது..
 
புரியாத பாடங்களுக்கு
என்னிடம் விளக்கங்கள்
கேட்டாள் அவள்..
விளக்கிய பின்
புரிந்ததாக சொன்னாள்..
 
அதுவரை புரிந்துவந்த
எல்லாபாடங்களும்
கல்லூரிபாடம் உட்பட
புரியாமல் போயின
எனக்கு
அவள் விளக்கம் கேட்டத்
தருணத்திலிருந்து....
 
-----------------------------------------------------------
தோழமையுடன்
க.அருணபாரதி
www.arunabharathi.blogspot.com
-----------------------------------------------------------