THOUSANDS OF FREE BLOGGER TEMPLATES »

Saturday, February 10, 2007

அவள்..

அவள்..

'உதாசினம் ' என்கிற
வார்த்தையின்
உள்அர்த்தம்
புரிய வைத்தவளே...

உன்னால்
அந்த வார்த்தையின்
அர்த்தம் மட்டுமல்ல
ஆழமும் புரிந்தது...

விலகி விடு என
உன் பார்வையால்
நீ கட்டளையிடுவதை,
புரிந்து கொண்டாலும்

ஏற்க மறுக்கும்
என் நெஞ்சத்திடம்
எப்படி சொல்வேன் ?
இதை...

முடிவாக..
முற்றுப்புள்ளியெல்லாம்
முடிவுரை அல்ல
அடுத்த வாக்கியத்தின்
ஆரம்பம் தான், பெண்ணே...!


***********************************************
                தோழமையடன்
-----------------க.அருணபாரதி----------------
===www.arunabharathi.blogspot.com==
***********************************************

No comments: