THOUSANDS OF FREE BLOGGER TEMPLATES »

Tuesday, February 13, 2007

ஒரு க(விதை)டிதம்......

மௌனத்தையும்
முறைப்பையும் தவிர
வேறெந்த பதிலும்
தராத அன்பானவளக்கு...
 
விடை எதிர்பார்த்து
உடைந்த நெஞ்சுடன்,
எழுதும் கடிதம்...

ஏன் பதிலேதும்
இல்லை....?

உன் பதிலைக் கூட
பெற முடியாதவனாகிப்
போய்விட்டேனா நான் ?

அர்த்தம் இழந்த
வார்த்தைகளாக
எனது கவிதைகள்
என்னுள் மட்டும் பரவி
உயிரைத் துருவி
எழுத்துக்காளாகவே
வாழ்ந்த போதும்

அதை தமிழுக்கு தான்
கொடுக்கிறோம்
என்கிற நினைவு ஒன்றே
என்னை இன்னும்
எழுத தூண்டுகிறது...

தமிழ் வளர்க்க
தன்னையும் அழிப்பான் தமிழன்
என்று எனக்கொரு மூடநம்பிக்கை...

எண்ணங்கள் வளர
எழுத்துக்கள் மிளிர
சின்னங்களாக
என் கவிதைகள்
உன்னை ஞாபகப்டுத்துகின்றன..

வாழ்க்கை நீரோட்டத்தில்
எல்லாம் மறந்து விடும்
என எல்லோரும்
சொன்னதை
ஏற்க முயன்று
பின் ஏமாந்தேன்..

நீ வாழும் உலகில்
நானும் இருக்கிறேன்
என்கிற குட்டி
மகிழ்ச்சியுடன்......

இப்படிக்கு,

தேயும் நிலவின்
வேதனை உணரந்திட
தானும் தேய்ந்திட விரும்பும்
மடத்தனமான மானிடன்,
உன் காதலன்.....


***********************************************
                தோழமையடன்
-----------------க.அருணபாரதி----------------
===www.arunabharathi.blogspot.com==
***********************************************

1 comment:

ranjini prasanth said...

தங்கள் கவிதைகள் மிக அருமை தோழரே தொடர என் வாழ்த்துக்கள்