THOUSANDS OF FREE BLOGGER TEMPLATES »

Tuesday, March 6, 2007

லட்சியம் வெல்லுமடா..

லட்சியம் வெல்லுமடா..
 
முற்றுப்புள்ளிகள் எல்லாம்
முடிவுரை அல்ல..
அடுத்த வாக்கியத்தின்
ஆரம்பமே...

'தோல்வி - சோர்வு '
இவையெல்லாம் உனை
பயங்கொள்ள வைக்கத் தான்
படைக்கப்பட்டன..

அரிசிமாவுக் கோலமிட்டு
எறும்புக்குகூட பசியாற்றிய
தமிழன் தான் இன்று
தன் மண்ணிலேயே அகதி...

கலங்காதே தமிழனே..
லட்சியம் வெல்லும்
நிச்சயம் ஒரு திகதி..

புல்கூட மிதி பட்டால்
எழுந்து தானாய் நிற்கும்..
புல் அல்லநீ  தமிழா
நீ புலிப்படையின் வர்க்கம்..

உணர்ந்து நீ எழுந்தால்
உலகம் உனது சொர்க்கம்..

மூவேந்தர்கள் வளர்த்த நம்
மூதாதையர் மொழியை
பாவேந்தர் சொற்படி
பாரெங்கும் பரப்புவோம்..

வா தமிழனே.. வென்று காட்டுவோம்...

***********************************************
                தோழமையடன்
-----------------க.அருணபாரதி----------------
===www.arunabharathi.blogspot.com==
***********************************************

No comments: