THOUSANDS OF FREE BLOGGER TEMPLATES »

Sunday, March 25, 2007

வான்படை வாளுருவியது...

வான்படை வாளுருவியது...
 
சிங்கள இராணுவம்
சித்தம் கலங்கிட
தமிழரின் வான்படை
கொடுத்த அடியில்
 
எங்கட மக்களை
ஏதிலி ஆக்கிய
சிங்கள படைகள்
விழந்தது காண்..
 
தேன்மொழித் தமிழின்
மானங்காத்த வீரர்கள்
வான்படை கொண்டு
வாளுருவியது காண்...
 
எட்டி உதைத்து
இறுமாப்பு கொண்ட
சிங்கள வெறியரின்
சீற்றத்தை தாங்கி
 
உலக சமூகத்தின்
பார்வைக்கு ஏங்கி
எத்தனை வருடங்கள்
கைக்கட்டி நிற்க ?
 
சிங்களன் செய்தால்
உள்நாட்டு போராம்
சீற்றத்துடன் தமிழன்
செய்தால் தீவிரவாதமா ?
 
பாகிஸ்தான் தருகிறான்
அமெரிக்கா தருகிறான்
பார்க்காமல் விட்டால்
இந்தியனும் தருகிறான்..
 
தமிழர் படைகண்டு
தானாய் நடுங்கிஓடும்
சிங்களன் ஆயுதமே
போதுமடா தமிழர்க்கு...
 
லட்சிய போராளிக்கு
பொருட்டல்ல மரணம்..
ஈழம் வெல்லட்டும்
இதுதான் தருணம்...
 
-----------------------------------------------------------
"எங்கள் வாழ்வும் எங்கள் வளமும்
மங்காத தமிழென்று சங்கே முழங்கு"
-----------------------------------------------------------
தோழமையுடன்
       க.அருணபாரதி
   www.arunabharathi.blogspot.com
-----------------------------------------------------------

No comments: