நிலைக்காது எனத்தெரிந்தும்
எனது கிறுக்கல்களின் தொகுப்பு கவிதையாக இணையத்தில்......
எழுதியவர் :
Unknown
at
5:21 AM
0
கருத்துக்கள்
எழுதியவர் :
Unknown
at
3:04 AM
0
கருத்துக்கள்
எழுதியவர் :
Unknown
at
9:24 PM
0
கருத்துக்கள்
பிரிவெனும் தண்டனை - க.அருணபாரதி
-----------------------------------------------------------
"பாதையை தேடாதே.. உருவாக்கு"
- புரட்சியாளர் லெனின் -
-----------------------------------------------------------
தோழமையுடன்
க.அரு ணபாரதி
www.arunabharathi.blogspot.com
-----------------------------------------------------------
எழுதியவர் :
Unknown
at
10:03 PM
0
கருத்துக்கள்
எழுதியவர் :
Unknown
at
2:24 AM
0
கருத்துக்கள்
எழுதியவர் :
Unknown
at
4:05 AM
0
கருத்துக்கள்
எழுதியவர் :
Unknown
at
5:37 AM
0
கருத்துக்கள்
எழுதியவர் :
Unknown
at
11:45 PM
0
கருத்துக்கள்
எதிர்காலக் கனவுகள்
என்னவென்று அறியாமல்
புதிர்கேள்வி ஏதுமின்றி
பூக்களொடு உறங்குகிறாள்
என் தேவதை...
சிரித்தாலும் அழுதாலும்
சிறகடிக்க பறந்தாலும்
சித்திரமாய் தோன்றும்
சின்னஞ்சிறு புதுக்கவிதை...
எழுதியவர் :
Unknown
at
2:30 AM
0
கருத்துக்கள்
பாசப் பிணைப்புடன்
உன் கைகளில் இருக்கும்
பனித்துளிகள் தான்
உன்னை எண்ணி வியக்கிறது...
"நாம் விழுந்தது கைகளிலா
அல்லது மலர் மெத்தையிலா என.."
எழுதியவர் :
Unknown
at
4:25 AM
0
கருத்துக்கள்
எல்லோர் வாழ்விலும்
உள்ளன்பின் பிரதிநிதியாய்
தோழி..
எல்லோர் வீட்டிலும்
தனக்கே பிரதிநிதியாய்
மனைவி..
'எங்கெங்கு காணினும் சக்தியாடா'
பாடிய கவிஞனின் பாட்டின்
பிரதிநிதியாய்
வளர்ந்து வரும் 'பெண்ணியம்'...
வாழ்த்துவதோடு முடியாமல்
பெண்களை வாழவைப்பது பற்றி
சிந்திப்போம்..
பெண்களை போதையாய்
காட்டும் சினமா கயவர்களை
நிந்திப்போம்..
என் வாழ்வின் அனைத்து பக்கங்களிலும் விடாது
பற்றி கொண்டிருக்கும் அனைத்து மகளிருக்கும்
என் அன்பான மகளிர் தின வாழ்த்துக்கள்...
எழுதியவர் :
Unknown
at
10:39 PM
1 கருத்துக்கள்
'தோல்வி - சோர்வு '
இவையெல்லாம் உனை
பயங்கொள்ள வைக்கத் தான்
படைக்கப்பட்டன..
அரிசிமாவுக் கோலமிட்டு
எறும்புக்குகூட பசியாற்றிய
தமிழன் தான் இன்று
தன் மண்ணிலேயே அகதி...
கலங்காதே தமிழனே..
லட்சியம் வெல்லும்
நிச்சயம் ஒரு திகதி..
புல்கூட மிதி பட்டால்
எழுந்து தானாய் நிற்கும்..
புல் அல்லநீ தமிழா
நீ புலிப்படையின் வர்க்கம்..
உணர்ந்து நீ எழுந்தால்
உலகம் உனது சொர்க்கம்..
மூவேந்தர்கள் வளர்த்த நம்
மூதாதையர் மொழியை
பாவேந்தர் சொற்படி
பாரெங்கும் பரப்புவோம்..
வா தமிழனே.. வென்று காட்டுவோம்...
***********************************************
எழுதியவர் :
Unknown
at
9:50 PM
0
கருத்துக்கள்
மழைத்துளியும் ஏங்குதடி...
உன் மேல்
உள்ள ஆசையில்
தானோ என்னவோ
நீ உலா போக வெளியே
வரும் பொழுது தான்
கருகருக்கிறது வானம்,
மழையாய் உன்னை
முத்தமிட...
மழைத்துளிகள் மேலே
படாதவாறு குடை கொண்:டு
தடுத்தாய் நீ...
ஆசையோடு வந்த
மழைத்துளிகள் கீழே விழுந்து
கண்ணீர் விட்டன..
தன் பலத்தைக் காட்டி
உன்னை மயக்க
நினைத்தது மின்னல்..
உன் சிரிப்பைக்
கண்டு அதற்கும்
வந்தது இன்னல்..
உன் பாதம் பட்டு
உரசிச் சென்றதால்
மழைத்துளிகள் மோட்சம்
அடைந்து
நதியில் கலந்தன..
மழையைக் கூட
மகிமைப் படுத்தி
எழுதச் சொல்வது
காதல்..
எழுதும் போது
வான் மேகம் போல
வார்த்தைகளுக்குள் மோதல்.....
வானத்தில் மட்டுமல்ல
என் மனதிலும்,
மழை..
எழுதியவர் :
Unknown
at
4:33 AM
0
கருத்துக்கள்
உயிர்க் காக்கும் விவசாய
பயிர் வளர்க்க நீரில்லை..
உயர்-உச்ச நீதிமன்ற
உத்தரவிட்டும் கூட
உரிமையான நீரைப்
பெற்றுத் தர ஆளில்லை...
அரசியலின் பெயராலே
தமிழனின் வாழ் வழித்து
வாக்கு மட்டும் வாங்க வரும்
வக்கற்ற கட்சிகளுக்கு
புரிய வைக்க வேண்டும்..
நாம் கேட்கும் நீர்
பிச்சையல்ல
"உரிமை"..
சாதி மதம் கடந்து
கன்னடனாக அவனிருக்க
நீதி தனை உணர்த்த
தமிழனாக இருப்பது தவறா ?
பிரிவினைவாதமா ?
ஐயாயிரம் வருடங்களாக
தமிழனாக இருந்தவர்கள்
என்பதை மறந்து,
இருநூறு வருடங்களாகத் தான்
இந்தியன் என்கிறோம்...
வந்தாரை வாழ வைக்கும்
தமிழகமாம் இது...
வந்தாரை மட்டுமே
வாழ வைக்கும் தமிழகமாக
மாறியது எப்போது ???
எழுதியவர் :
Unknown
at
10:04 PM
0
கருத்துக்கள்
உன் பதிலைக் கூட
பெற முடியாதவனாகிப்
போய்விட்டேனா நான் ?
தமிழ் வளர்க்க
தன்னையும் அழிப்பான் தமிழன்
என்று எனக்கொரு மூடநம்பிக்கை...
எண்ணங்கள் வளர
எழுத்துக்கள் மிளிர
சின்னங்களாக
என் கவிதைகள்
உன்னை ஞாபகப்டுத்துகின்றன..
வாழ்க்கை நீரோட்டத்தில்
எல்லாம் மறந்து விடும்
என எல்லோரும்
சொன்னதை
ஏற்க முயன்று
பின் ஏமாந்தேன்..
நீ வாழும் உலகில்
நானும் இருக்கிறேன்
என்கிற குட்டி
மகிழ்ச்சியுடன்......
இப்படிக்கு,
தேயும் நிலவின்
வேதனை உணரந்திட
தானும் தேய்ந்திட விரும்பும்
மடத்தனமான மானிடன்,
உன் காதலன்.....
எழுதியவர் :
Unknown
at
1:25 AM
1 கருத்துக்கள்
அவள்..
'உதாசினம் ' என்கிற
வார்த்தையின்
உள்அர்த்தம்
புரிய வைத்தவளே...
உன்னால்
அந்த வார்த்தையின்
அர்த்தம் மட்டுமல்ல
ஆழமும் புரிந்தது...
விலகி விடு என
உன் பார்வையால்
நீ கட்டளையிடுவதை,
புரிந்து கொண்டாலும்
ஏற்க மறுக்கும்
என் நெஞ்சத்திடம்
எப்படி சொல்வேன் ?
இதை...
முடிவாக..
முற்றுப்புள்ளியெல்லாம்
முடிவுரை அல்ல
அடுத்த வாக்கியத்தின்
ஆரம்பம் தான், பெண்ணே...!
எழுதியவர் :
Unknown
at
2:01 AM
0
கருத்துக்கள்
எழுதியவர் :
Unknown
at
7:37 PM
0
கருத்துக்கள்